தைரியமுள்ள ஒருவர்
![]() |
ஏனோக்கு |
அக்காலத்தில் மக்கள் ஏன் அவ்வளவு மோசமான காரியங்களைச் செய்தார்கள் என்று உனக்குத் தெரியுமா? இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: ஆதாம் ஏவாளை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி செய்தது யார்? சாப்பிடக் கூடாதென்று கடவுள் சொல்லியிருந்த அந்தப் பழத்தைச் சாப்பிடும்படி தூண்டியது யார்? ஆம், ஒரு கெட்ட தூதனே. பைபிள் அவனை சாத்தான் என்று அழைக்கிறது. எல்லோரையும் கெட்டவர்களாக்க அவன் முயன்று கொண்டிருக்கிறான்.
![]() |
கொலையும் கொள்ளையும் |
அந்தக் கெட்ட மக்கள் மத்தியில் ஏனோக்கு நீண்ட காலம் வாழும்படி கடவுள் விட்டுவிடவில்லை. ஏனோக்கு 365 வயது மட்டுமே வாழ்ந்தார். “365 வயது மட்டுமே” என்று நாம் ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் அந்தக் காலத்து ஆட்கள் இப்பொழுது இருக்கிறவர்களைவிட ரொம்ப பலசாலிகளாக இருந்தார்கள், ரொம்ப காலம் வாழ்ந்தார்கள். உதாரணத்திற்கு, ஏனோக்கின் மகன் மெத்தூசலா 969 வயதுவரை வாழ்ந்தாரே!
![]() |
மக்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள் |
பூமியில் அப்போது ஏன் அவ்வளவு அதிக தொந்தரவுகள் இருந்தன? அதற்கு ஒரு காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? சாத்தான் ஒரு புதிய வழியைப் பயன்படுத்தி மக்களைக் கெட்ட காரியங்கள் செய்யும்படி தூண்டியதே அதற்கு ஒரு காரணம். அந்தப் புதிய வழி என்ன என்பதைப் பற்றி அடுத்ததாக நாம் தெரிந்துகொள்வோம்.
ஆதியாகமம் 5:21-24, 27; 6:5, 11-13; எபிரெயர் 11:5; யூதா 14, 15.
No comments:
Post a Comment